பத்திரிகைச் செய்தி. 11.4.25
அதிக சாலை போக்குவரத்து நேரங்களில் கனரக வாகனங்கள் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
பிப்ரவரி 19ம் முதல், உச்ச நேரங்களில் கோலாலம்பூருக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் நெடுஞ்சாலைகளில் லாரிகள் செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
மிகவும் நெருக்கடியான நேரங்களில் மெதுவாக நகரும் கனரக வாகனங்களை அகற்றுவதன் மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கில் போக்குவரத்து ஓட்டத்தை சீராக்க இந்த விதி உள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கு வழியாகச் செல்லும் தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வழக்கமாக அதிக நெரிசல் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் ஓட்டம் சீராக இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
கடந்த ஜூலை 2024 ல், பினாங்கில் உள்ள ஜாலான் மஸ்ஜித் நெகிரி மற்றும் ஜாலான் ஸ்காட்லாந்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, நெரிசல் நேரங்களில் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்குமாறு சாலைப் போக்குவரத்துத் துறையை, பி.ப.சங்கம் வலியுறுத்தியதாக அதன் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் உச்ச நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிப்பது நேர்மறையான பலன்களைக் காட்டினால், பினாங்கு மற்றும் பிற மாநிலங்களிலும் அதைச் செயல்படுத்துவது குறித்து பரிசீலிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
இதன் நன்மைகள் தெளிவாக உள்ளன. சீரான போக்குவரத்து, குறைவான போக்குவரத்து நெரிசல்கள், பயணிகளுக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதோடு மற்றும் மாசுபாட்டைக் குறைக்கும்.
இது மிகவும் திறமையான சரக்கு போக்குவரத்து திட்டமிடலை ஊக்குவிக்கிறது.
ஆகவே போக்குவரத்து அமைச்சு, இனியும் தாமதிக்காமல் உச்ச நேரங்களில் கனரக வாகனங்களுக்கு எல்லா மாநிலத்திலும் தடை விதிக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்த விரும்புவதாக முகைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.
முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

