பினாங்கு, ஜூரு ஆற்றின் மாசுபாடு மீனவர்கள் மற்றும் கோழி வளர்ப்பாளர்களைப் பெரிதும் பாதிக்கிறது. நெகிழிகள் தேங்கிக் கிடக்கினறன.

ஜுரு ஆற்றின் மேற்பரப்பில் மிதந்து செல்லும் போக்கிலைகள்.
ஜுரு ஆற்றை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள்

மத்திய செபராங் பிறை  மாவட்டத்தில் உள்ள ஜூரு ஆற்றின் மாசுபாட்டைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு , பினாங்கு மாநில அரசு, செபராங் பிறை மாநகர் மன்றம்,சுற்றுச்சூழல் துறை மற்றும் நீர்பாசன மற்றும் வடிகால் துறை ஆகியவற்றை  வலியுறுத்துகிறது பினாங்கு பயனீட்டார் சங்கம்.

பி.ப.சங்கம் நடத்திய ஆய்வில், அப்பகுதியில் உள்ள சுங்கை ரம்பை ஆற்றிலிருந்து களைகள் மற்றும் நெகிழி கழிவுகளால் தூய்மைக்கேடு அடைகிறது. இந்த மாசுபாடு ஜூரு ஆற்றிலிருந்து  அருகிலுள்ள கடலுக்கு  கொண்டு செல்லப்பட்டு, கம்போங் கோலா ஜூருவில் உள்ள மீனவர்கள் மற்றும் கோழி வளர்ப்பாளர்களின் அன்றாட நடவடிக்கைகளை கடுமையாக பாதிக்கிறது என பி.ப.சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சனை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது ஆனால் பயனுள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கம்பத்து தலைவர் வாயிட் ஒத்மான் தெரிவித்தார்.

களைகள் மற்றும் குப்பைகள் தேங்கி மீன்பிடி வலைகள் சேதமடைவதைத் தவிர, வளர்ப்பு சேவலின் வளர்ச்சியும் தடைபட்டுள்ளதாக அவர் கூறினார். இதனால் பாதிக்கப்பட்ட கோழி வளர்ப்போரின் வருமானம் பாதிக்கப்படுகிறது.

Wahid Othman
Helmi Ibrahim

சேவல் வளர்ப்பாளர் ஹெல்மி இப்ராகிம், 45, கூறுகையில், களைகள் மற்றும் குப்பைகள் தேங்குவதால் ஏற்படும் மாசுபாடு தொடர்ந்தால், உடனடியாக கவனிக்கப்படாவிட்டால், அதிக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

களைகள் மற்றும் நெகிழி கழிவுகள் சேவல்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளில் தேங்கினால், வளர்க்கப்படும் சேவல்கள் இறக்க நேரிடும் என அவர் கவலை தெரிவித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இக்கிராமத்தில் உள்ள மீனவர்கள் மற்றும் கோழி வளர்ப்பவர்கள் மேலும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என முகைதீன் தெரிவித்தார்.

குவாலா ஜுரு மீனவர்கள் கப்பல் துறையில் சிக்கிக்கொண்டுள்ள மிதக்கும் போக்கிலைகள்.

நிலைமையை மதிப்பிடுவதற்கும், சிக்கலைத் தீர்க்க தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் ஒரு இடத்தைப் பார்வையிட வேண்டும் என்று பி.ப.சங்கம் கேட்டுக்கொள்கிறது. மாசு ஏற்படுத்திய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தச் சிக்கல் மீண்டும் வராமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி கண்காணிப்பு வருகைகளை மேற்கொள்ள வேண்டும். மாசுபாடு காரணமாக வருமான இழப்பை சந்தித்த மீனவர்கள் மற்றும் கோழி வளர்ப்பாளர்களுக்கு அரசாங்கம் உதவி அல்லது இழப்பீடு வழங்க வேண்டும் என்று பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக  முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

முகைதீன் அப்துல் காதர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்